Pages

Sunday, August 21, 2011

உபுண்டு உச்ச நீதிமன்றத்திலும் உபுண்டு லினக்ஸ்


கடந்த 5 வருடங்களாக உச்ச நீதிமன்றத்தில் உபயோகப்படுத்தப்பட்டு வந்த redhat linux 5 தற்சமயம் மாற்றப்பட்டு உபுண்டு லினிக்ஸ் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. எனவே உச்ச நீதிமன்றம் அதன் கீழ் இயங்கும் சுமார் 17000 நீதிமன்றத்திலும் உபுண்டு 10.04 பயன்படுத்த கேட்டுக்கொண்டுள்ளது.

ஒவ்வொரு நீதிமன்றத்திலும் சுமார் 4 முதல் 5 கணினிகள் இருக்கும். அதன் படி சுமார் அனைத்து நீதிமன்றத்திலும் உபுண்டு என்றால் சுமார் 85000 கணினிகளில் உபுண்டு 10.04 நிறுவப்படும்.

இந்த சுட்டியை பார்த்தால் நமக்கு நன்றாக புரியும். இதில் உபுண்டு நிறுவ விளக்கங்கள் மற்றும் வீடியோ (ogv வடிவில் கிடைக்கிறது) பார்த்தால் தெரியும்.

http://www.sci.nic.in/e-committee.htm



மேலும் உபுண்டு பற்றிய tips & tricks போன்றவற்றை sms மூலம் பெறுவதற்கு கீழ்கண்ட சுட்டியை பார்க்கவும்.

http://labs.google.co.in/smschannels/subscribe/UBUNTU-LINUX

sms மூலம் trips & tricks பெறுவதற்கு நம்முடைய கைப்பேசியிலிருந்து

ON UBUNTU-LINUX என்று தட்டச்சு செய்து 09870807070 என்ற எண்ணிற்கு sms அனுப்ப வேண்டும்.

உச்ச நீதிமன்றமே அதில் இருக்கும் ஊழியர்களை tips&trics பெறுவதற்கு இந்த சேனலில் இணையுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.


3 comments:

Unknown said...

லினக்ஸின் பெருமை உணரட்டும்; அனைவரும்

mani said...

எங்கும் லினக்ஸ்..!!

arulmozhi r said...

@master ala mohamed
@mani

வருகைக்கு நன்றி. லினக்ஸின் பெருமை உலகம் உணர்ந்துகொண்டுள்ளது.